கத்தாரில் இன்று அமெரிக்கா – தலிபான் அமைதி ஒப்பந்தம்  கையெழுத்தாகிறது.!

Peace Treaty between US and Taliban.

அமெரிக்கா – தலிபான் அமைதி ஒப்பந்தம், கத்தாரில் இன்று (29-02-2020) கையெழுத்தாகிறது என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது. மேற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் – அமெரிக்க படைகள் இடையே கடந்த 20 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது.

இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட, தலிபான்களுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில், அமைதி ஒப்பந்தம் மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று கையெழுத்தாகிறது.

மேலும் இந்த நிகழ்வில், இந்தியா சார்பில் கத்தார் நாட்டிலுள்ள இந்திய அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.