கை சுத்திகரிப்பானை காரில் வைத்து செல்வதால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை.!

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் உள்துறை அமைச்சகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில்,
கை சுத்திகரிப்பான்களை (Hand sanitizer)
பயன்படுத்துவது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும், கைகளை சுத்தம் செய்வதற்காக இதனை வாகனங்களிலும் மக்கள் எடுத்து செல்கின்றனர்.

இந்த கை சுத்திகரிப்பானை காரில் வைப்பதால் தீ விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதால் காரில் வைப்பதை தவிர்க்கும்படியும், கவனமாக இருக்கும்படியும், கத்தார் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.