கத்தாரில் நடக்கவிருந்த PROJECT QATAR 2020 ஒத்திவைப்பு..!

Representational image from Project Qatar 2019. Image Source : The Peninsula Qatar

பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பதால், கத்தாரில்
நடக்கவிருந்த செயல்திட்ட கத்தார் 2020 ஐ (Project Qatar 2020) ஒத்திவைப்பதற்கான
முடிவை கத்தார் பிரதான கட்டுமான கண்காட்சி அமைப்பாளர்கள்
அறிவித்துள்ளனர்.

இந்த கண்காட்சியானது, அடுத்த மாதம் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 9 வரை தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறவிருந்த நிலையில், இப்போது 2020 செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கத்தார் திட்டமானது ஒவ்வொரு ஆண்டும் கட்டுமான சந்தையில் மிகப்பெரிய உலகளாவிய வீரர்களை ஈர்க்கிறது மற்றும் கத்தார் சந்தையில் முடிவெடுப்பவர்களுடன் ஒப்பந்தங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது என கூறியுள்ளது.

இதில், கடந்த ஆண்டு சீனா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், துருக்கி, இந்தியா உள்ளிட்ட 34 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.