கத்தார் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள், தூதரக சேவைகளைப் பெற, அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, தோஹாவின் சல்வா (அல் அத்தியா மார்க்கெட்) பகுதியில், இந்திய தூதரக சேவை சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்திய தொழிலாளர்கள் பலர் தங்களுக்கு தேவையான பாஸ்போர்ட் புதுப்பித்தல், அட்டஸ்டேசன் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பெற்றுக் கொள்ளும் வகையில், இந்த சிறப்பு முகாமானது ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், இந்த முகாமானது தங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்ததாக சிறப்பு முகாமில் பயன்பெற்றவர்கள் தெரிவித்தனர்.