கத்தாரில் இன்று இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி.!

Qatar Indian Embassy
Pic: India In Qatar

கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தின் சார்பில், இன்று (31-12-2020) மதியம் 3.00 மணி முதல் ஆன்லைன் மூலம் இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டரில் தெரிவித்துள்ளது.

இந்த தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சிக்கு கத்தார் இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல் அவர்கள் தலைமை வகிப்பார்.

COVID-19 தடுப்பூசியை போட்டுக்கொண்ட கத்தார் அமீர்.!

மேலும், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்று தொழிலாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள் என்றும், இந்த தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் labour.doha@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…