கத்தார் மற்றும் இத்தாலிய விமானப்படைகள், இத்தாலிக்கு நன்கொடை அளித்த கள மருத்துவமனைகளை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியாக பணியாற்றினர் என்று கத்தாரில் உள்ள இத்தாலிய தூதரகம் ட்வீட்டர் பதிவில் கூறியுள்ளது.
இத்தாலியர்களின் முயற்சிகளுக்கு ஆதரவாக, கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் உத்தரவின் பேரில், சமீபத்தில் இத்தாலிக்கு வந்த இரண்டு கள மருத்துவமனைகளை இது குறிப்பிட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸிற்கு எதிரான இந்த போராட்டத்தை வெல்வதற்கான முயற்சிகளில், நாங்கள் சேர கடமைப்பட்டுள்ளோம் என்று கத்தாரில் உள்ள இத்தாலிய தூதரகம் ட்வீட் செய்துள்ளது.
Source : Gulf Times.