கத்தார் பிரதமரும் உள்துறை அமைச்சருமான எச் இ ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஸிஸ் அல் தானி (H E Sheikh Khalid bin Khalifa bin Abdulaziz Al Thani) அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று (07-04-2020) நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளின், உள்துறை அமைச்சர்களின் அவசரக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில், GCC நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பல தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.