கொரோனா வைரஸ் (COVID-19) பரவலை தடுக்கும் விதமாக, தொழில்துறை பகுதியில் 1 முதல் 32 வரையிலான வீதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்காக கத்தார் 150 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கட்டி வருகிறது.
மேலும், இதில் 40 படுக்கைகளும் மற்றும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் மக்களுக்கு சேவை வழங்கக் கூடிய பெரிய அவசர சிகிச்சை பிரிவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை பகுதியின் பூட்டப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற உள்துறை அமைச்சகத்தின் களப் பயணத்தின் போது, இது அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை செனயா பகுதியில் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக செனயா 1 முதல் 32 வரையிலான வீதிகள் மூடப்பட்டுள்ளது.