கத்தாரில் நாளை முதல் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுகிறது.!

Qatar suspends schools and universities due to coronavirus.

கத்தாரில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் நாளை (10-03-2020) முதல் அறிவிப்பு வரும்வரை இடைநிறுத்தப்படும் என அரசு தகவல் தொடர்பு அலுவலகம் (GCO) இன்று (09-03-2020) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், அனைத்து பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கத்தார் அரசு மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்குள் இந்த இடைநீக்கம் உள்ளதாக கூறியுள்ளது.