பெய்ஜிங்கில் உள்ள கத்தார் தூதரகம் சீன குடியரசிற்க்கு மருந்துவ உதவிகளை வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில், பெய்ஜிங்கில் உள்ள கத்தார் மாநில தூதரகம் சீன மக்களுக்கு மருத்துவ உதவியை வழங்கியுள்ளது.
இதுகுறித்து சீனாவிற்கான கத்தார் மாநில தூதர் முஹம்மது அப்துல்லா அல்-தெஹைமி (H E Mohammed Abdullah Al Dehaimi) கூறுகையில், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், சீனாவுடன் கத்தார் ஒற்றுமையாக நிற்கிறது என்று கூறினார்.
மேலும், நெருக்கடியை சமாளிப்பதில் சீனாவின் வெற்றி குறித்து தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், அதைக் கட்டுப்படுத்த அவர்கள் எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டினார்.