கத்தார் எக்ஸான்மொபில் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பட்டத்தை இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப் ஜோடி வென்றது.
ஜனவரி 10 அன்று நடந்த கத்தார் ஓபன் இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் பிரிட்டிஷ் மெக்சிகன் ஜோடியான லூக் பாம்ப்ரிட்ஜ் மற்றும் சாண்டியாகோ கோன்சலஸ் ஆகியோரை சந்தித்தது இந்த ஜோடி.
இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் 3-6, 6-2, 10-6 என்ற செட் கணக்கில் ரோகன் போபண்ணா – வெஸ்லி ஜோடி வெற்றி பெற்று கத்தார் ஓபன் இரட்டையர் பட்டத்தை வென்றது.
ரோகன் போபண்ணா மற்றும் கூல்ஹோஃப் இணைந்து கைப்பற்றும் மூன்றாவது சாம்பியன்ஷிப் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்கு ஆண்டுகளில், மூன்றாவது முறையாக 2017 மற்றும் 2019 ஆண்டுகளை அடுத்து 2020லும் பட்டம் வென்றுள்ளனர்.