சவுதி அரேபியாவில், முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுப் பணியாளரை அவமதித்தற்காக, அந்நாட்டு குடிமகன் ஒருவரை கைது செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக சவுதி நியுஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
நீ முஸ்லிமல்லாதவன் ரமலான் மாதத்தில் நோன்பு பிடிக்கமால் இருக்கிறாய் என அவரை அவமதிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, அவரை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இது மாதிரியான செயற்பாடுகள் ஏற்புடையவை அல்ல என்றும், அவரவர்களுக்கு உரிய உரிமைகள் சவுதியில் வழங்கப்பட வேண்டும் என்றும், அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Qatar Update