சவுதியில் நோன்பு பெருநாள் விடுமுறையில் முழு ஊடரங்கை அமல்படுத்த திட்டம்.!

சவுதி அரேபியாவில் நோன்பு பெருநாள் பண்டிகையின் ஐந்து நாள் விடுமுறையின்போது, 24 மணி நேர முழு ஊரடங்கை அமல்படுத்த சவுதி அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சவுதி உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சவுதியில் ரமலான் விடுமுறையான மே 23ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை 24 மணி நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொடர்பாக விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் ரமலான் விடுமுறை முடியும்வரை அமலில் இருக்கும் என்றும், ரமலானுக்கு முந்தைய நாள் வரை காலை 9 மணி முதல் 5 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதி உண்டு என்று தெரிவித்துள்ளார்.

Source: தமிழக ஊடகங்கள்