சவுதி அரேபியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மன்னராக இருந்து வருபவர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் (84). இவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 20ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மன்னர் சல்மானுக்கு பித்தப்பை அழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் பைசல் சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராயல் கோர்ட்டு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மன்னர் சல்மானுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் அவரது பித்தப்பை அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை லேபராஸ்கோபிக் எனப்படும் குறைந்த ஆபத்துடைய செயல் முறையில் மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மன்னர் சல்மானின் உடல்நிலை நல்ல முறையில் தேறி வந்த நிலையில் நேற்று முன்தினம் (31-07-2020) அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
சவுதி அரேபியா மக்கள் நேற்று முன்தினம் ஹஜ் பெருநாள் கொண்டாடிய நிலையில், மன்னர் சல்மான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நல்ல செய்தி கிடைத்துள்ளதாக ராயல் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
#فيديو| #خادم_الحرمين_الشريفين يغادر المستشفى بعد أن منّ الله عليه بالصحة والعافية.
حفظ الله خادم الحرمين الشريفين ووقاه من كل مكروه ومتّعه بالصحة والعافية.#واس pic.twitter.com/dQFFPF48Mo— واس الأخبار الملكية (@spagov) July 30, 2020
Source: தமிழக ஊடகங்கள்.