தோஹாவிலிருந்து இந்தியா செல்லும் இரண்டாவது விமானம் இன்று புறப்படுகிறது.!

கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து, கேரளா திருவனந்தபுரத்திற்கு மே 10ஆம் தேதியன்று திட்டமிடப்பட்டிருந்த இந்தியா செல்லும் இரண்டாவது விமானம் இன்று மே 12ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக  கத்தாரிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த விமானம் தோஹாவிலிருந்து உள்ளூர் நேரப்படி, மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 12.40 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 10ஆம் தேதி புறப்பட இருந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் ட்வீட்டில் கூறியுள்ளது.

Source: Gulf Times.