கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) இன்று (10-03-2020) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான புதிய ஆறு வழக்குகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் புதிய வழக்குகள் அனைத்தும் வெளிநாட்டவர்கள் என்றும், சமூகத்தில் இருந்து முன்னர் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், புதிய நோயாளிகள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு, தொற்று நோய் மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும், அவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்களும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.