இந்தியாவில் இருந்து கத்தாருக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புள்ள கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்.!

smuggle attempted
Pic: @chennaicustoms

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்கு செல்லும் சரக்கு விமானத்தில் பெரும் அளவில் போதை மருந்துகள் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சுங்க இலாகா அதிகாரிகள் கத்தார் செல்லும் சரக்குகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 7 பார்சல்களில் 54 டிஜிட்டல் எடை எந்திரங்கள் இருப்பதாக தெரிந்தது. அதன் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த பார்சல்களை பிரித்து சோதனை செய்தனர்.

மத்திய கிழக்கில் வெளிநாட்டினர்கள் அதிகம் வேலை செய்யும் நாடுகளில் கத்தார் முதலிடம்.!

அப்போது அந்த எடை எந்திரங்களில் உயர் ரக கஞ்சா மறைத்து வைத்து கடத்த முயன்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 44 கிலோ எடைக்கொண்ட கஞ்சாவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், ரூ.70 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 620 கிராம் பிரிகேப்லின் என்ற போதை மாத்திரைகள் மற்றும் 700 கிராம் போதை பவுடர் ஆகியவற்றையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய விசாரணையில் போதை பொருள் கொண்ட பார்சலை கத்தாருக்கு அனுப்பிய ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகி மற்றும் ஏஜெண்டு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குவைத் அமீருக்கு எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பினார் கத்தார் அமீர்.!