கொரோனா வைரஸ்; கத்தாரில் மொத்த எண்ணிக்கை 18 ஆக உயர்வு.!

கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) இன்று (09-03-2020) மூன்று புதிய கொரோனா வைரஸ் வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டின் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொற்று நோய் மையத்தில் அனுமதிக்கப்பட்டு முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 300 நெருங்கிய தொடர்புகள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் கத்தாரில் உள்ள வெளிநாட்டவர்கள் என்றும், அவர்கள் மத்திய சந்தை மற்றும் ஒரு ஹைப்பர் மார்க்கெட்டில் (The Central market and a Hypermarket) இருந்து அடையாளம் காணப்பட்டனர் என்றும், மத்திய சந்தை மற்றும் ஹைப்பர் மார்க்கெட் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்றும், இதுவரை 3500 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.