கத்தாரில், மேலும் 3 நபர்களுக்கு கொரோனா உறுதி..!

Three new confirmed covid-19 cases in qatar.

கத்தார் நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான புதிய 3 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் சுகாதார அமைச்சகம்‌ (MoPH) நேற்று (17-03-2020) அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 442ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில், இதுவரை 8547 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 442 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.