கத்தாரில் மேலும் இரு நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி..!

Two additional confirmed cases of coronavirus disease reported in Qatar.

கத்தார் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான புதிய இரண்டு நபர்களை கத்தார் சுகாதார அமைச்சகம் (MOPH) இன்று (01-03-2020) உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரு நபர்களும் கத்தார் குடிமக்கள் என்றும் மேலும், இவர்கள் பிப்ரவரி 27 ஆம் தேதியன்று ஈரான் நாட்டிலிருந்து கத்தார் திரும்பியவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

நோயாளிகள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக தொற்று நோய் மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்‌ என்றும் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் (MOPH) தெரிவித்துள்ளது.

மேலும், ஈரான் நாட்டிலிருந்து திரும்பியவர்களை பரிசோதிக்கும் நடவடிக்கைள் தொடர்ந்து வருவதாகவும் கத்தார் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.