கத்தார் நாட்டில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது..!

கத்தார் நாட்டில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இரு ஆசிய நாட்டவர்களை, வடக்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கத்தார் அல்-மாட்டார் (AL-MATAR) பகுதியிலுள்ள, வீடு ஒன்றில் சிலர் மதுபானங்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட சோதனையில், வீட்டில் மறைத்து வைத்து மதுபானங்களை விற்பனை செய்து வந்த இரண்டு ஆசிய நபர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து பெரிய அளவிலான மது பானங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக, பொது வழக்கு விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டனர்.