சவுதி அரேபியாவில் இருந்து தமிழகத்திற்கு இரு விமானங்கள்; தூதரகம் அறிவிப்பு.!

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் “வந்தே பாரத்” திட்டத்தின் மூன்றாம் கட்டமாக இந்தியா செல்லும் விமானங்களின் பட்டியலை சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

இந்த மாதத்தில் ஜூன் 16ஆம் தேதி முதல்
இயக்கப்பட உள்ள 12 விமானங்களில், இரு விமானங்கள் தமிழகத்திற்கு
செல்லவிருக்கின்றன. தமிழகத்திற்கு செல்லும் இரு விமானங்களும் இண்டிகோ (Indigo) நிறுவனத்தை சேர்ந்த விமானங்கள் ஆகும்.

சவுதி தமாம் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து  திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு ஜூன் 21ஆம் தேதி ஒரு விமானமும், சவுதியின் மற்றொரு நகரமான ஜித்தாவில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கோயமுத்தூர் சர்வதேச விமான நிலையத்திற்கு ஜூன் 22ஆம் தேதி ஒரு விமானமும் செல்லவிருக்கின்றன.