கொரோனா வைரஸ் காரணமாக
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் “வந்தே பாரத்” திட்டத்தின் மூலம் கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு நேற்று (12-06-2020) மேலும் இரண்டு விமானங்கள் புறப்பட்டது.
கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்திய தலைநகர் டெல்லிக்கு 177 பயணிகள் மற்றும் 3 குழந்தைகளுடன் ஒரு விமானமும், அதே போல், கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கேரளா மாநிலம் கொச்சினுக்கு 169 பயணிகள் மற்றும் 3 குழந்தைகளுடன் ஒரு விமானமும் புறப்பட்டு சென்றுள்ளது. இந்த இரண்டு விமானங்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ஆகும்.
மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 126 குழந்தைகள் மற்றும் 4,382 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
IX- 1476 took off from HIA for Kochi a short while ago with 169 passengers and 3 infants. This was the 26th flight from Doha under #Vandebharat bringing the total number of repatriated passengers to 4382, plus 126 infants. @DrSJaishankar @MOS_MEA @MEAIndia pic.twitter.com/pLoi4eItJy
— India in Qatar (@IndEmbDoha) June 12, 2020