கத்தாரிலிருந்து சென்னைக்கு 151 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.!

Photo : India Embassy in Qatar

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் மீட்கும் “வந்தே பாரத்” திட்டத்தின் அடிப்படையில், கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு இன்று (03-06-2020) 16வது விமானம் புறப்பட்டது.

கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 151 பயணிகள் மற்றும் 2 குழந்தைகளுடன் ஏர் இந்தியா AI-1926 விமானம் சற்று முன் புறப்பட்டு சென்றது.

கத்தாரிலிருந்து இதுவரை நாடு திரும்பிய மொத்த எண்ணிக்கை 69 குழந்தைகள் மற்றும் 2,651 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் கூறியுள்ளது.