வந்தே பாரத் திட்டத்தின் 4ம் கட்டமாக கத்தாரில் இருந்து முதல் விமானம் இன்று இந்தியா புறப்பட்டது.!

Pic: All india Radio News

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டமாக  கத்தாரில் இருந்து இன்று (07-07-2020) இந்தியாவுக்கு முதல் விமானம் புறப்பட்டது.

கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உத்திரபிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்திற்கு 212 பயணிகள் மற்றும் ஒரு கைக்குழந்தைகளுடன் இண்டிகோ (6E 8715) விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.
இது வந்தே பாரத் திட்டத்தின் கீழ், கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 51வது விமானம் ஆகும்.

மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 241 குழந்தைகள் மற்றும் 8,916 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.