கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டமாக கத்தாரிலிருந்து இன்று (08-07-2020) ஒரு விமானம் கேரளாவிற்கு புறப்பட்டது.
கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு 205 பயணிகள் மற்றும் ஒரு கைக்குழந்தைகளுடன் இண்டிகோ (6E 8702) விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.
இது வந்தே பாரத் திட்டத்தின் கீழ், கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 53வது விமானம் ஆகும்.
மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 246 குழந்தைகள் மற்றும் 9,331 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
6E 8702 took off from HIA for Trivandrum a short while ago with 205 passengers and an infant. This was the 53rd flight from Doha under #Vandebharat, bringing the total number of repatriated passengers to 9331, plus 246 infants. @DrSJaishankar @MOS_MEA @MEAIndia pic.twitter.com/dwznyPYYRE
— India in Qatar (@IndEmbDoha) July 8, 2020