கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டமாக கத்தாரில் இருந்து கேரளாவிற்கு இன்று (18-07-2020) மேலும் ஒரு விமானம் புறப்பட்டது.
கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு 197 பயணிகள் மற்றும் 2 கைக்குழந்தைகளுடன் இண்டிகோ (6E 8702) விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இது வந்தே பாரத் திட்டத்தின் கீழ், கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 91வது விமானம் ஆகும்.
மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 340 கைக்குழந்தைகள் மற்றும் 16,583 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
6E 8702 took off from HIA for Trivandrum a short while ago with 197 passengers and 2 infants. This was the 91st flight from Doha under #Vandebharat, bringing the total number of repatriated passengers to 16583, plus 340 infants. @DrSJaishankar @MOS_MEA @MEAIndia pic.twitter.com/fAWg280zdk
— India in Qatar (@IndEmbDoha) July 18, 2020