கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டமாக கத்தாரில் இருந்து கேரளாவிற்கு இன்று (30-07-2020) மேலும் ஒரு விமானம் புறப்பட்டது.
கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்கு 205 பயணிகள் மற்றும் 3 கைக்குழந்தைகளுடன் இண்டிகோ (6E 8704) விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இது வந்தே பாரத் திட்டத்தின் கீழ், கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 142வது விமானம் ஆகும்.
மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 460 கைக்குழந்தைகள் மற்றும் 25,632 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
6E 8704 took off from HIA for Kochi a short while ago with 205 passengers and 3 infants. This was the 142nd flight from Doha under #Vandebharat, bringing the total number of repatriated passengers to 25632, plus 460 infants. @DrSJaishankar @MOS_MEA @MEAIndia pic.twitter.com/wrtPDqmQtJ
— India in Qatar (@IndEmbDoha) July 30, 2020