நெருக்கடி முகாமைத்துவத்திற்கான உச்சக் குழுவின் செய்தித் தொடர்பாளர் HE Lolwah bint Rashid bin Mohammed Al Khater நேற்று (09-04-2020) மாலை செய்தியாளர் சந்திப்பில், தொழில்துறை பகுதியை படிப்படியாக திறக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், தொழில்துறை பகுதியை படிப்படியாக திறப்பது, பிராந்தியத்தில் வசிப்பவர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
“நம் அனைவருக்கும் இந்த மூடல் காரணமாக சிரமம் இருந்தபோதிலும், இந்த நெருக்கடியான சூழலில் இது ஒரு அவசியமான ஒளியாக உள்ளது. அதன் விளைவுகளைத் தணிக்க அதிகாரிகள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்” என்று வலியுறுத்தி கூறினார்.