கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று (07-12-2020) குவைத் அமீர் HH ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.
இந்த தொலைபேசி உரையாடலில், வளைகுடா ஒற்றுமையை நிலைநிறுத்த குவைத் அரசு மேற்கொண்ட மதிப்புமிக்க முயற்சிகளுக்கு குவைத் அமீருக்கு நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
வெளிநாட்டு தொழிலாளர்களின் தாகத்தை தணிக்கும் கத்தார் தன்னார்வ அமைப்பு.!
நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவதற்காக மறைந்த குவைத் அமீர் HH ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா
அவர்கள் தொடங்கிய நல்ல முயற்சிகள் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளின் ஒற்றுமை குறித்த கருத்துக்களையும் அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.
மேலும், இரு சகோதர நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான வழிகள் குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் மதிப்பாய்வு செய்தனர்.
வளைகுடா நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒப்பந்தம்: குவைத் அமீர் மகிழ்ச்சி.!
HH the Amir held via telephone a conversation with HH the Amir of Kuwait during which HH expressed his thanks and appreciation to HH the Amir of Kuwait for the valuable efforts made by Kuwait to uphold the Gulf unity. #QNA pic.twitter.com/DiEkWXkPFJ
— Qatar News Agency (@QNAEnglish) December 7, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…