இந்திய பிரதமர் நரேந்திர மோடி கத்தார் அமீருக்கு எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பினார்.!

Amir receives message India PM

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் (27-12-2020) கத்தார் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் நேற்று (28-12-2020) காலை கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களைச் அமிரி திவான் அலுவலகத்தில் சந்தித்தார்.

கத்தார் தொழிலதிபர்களை இந்தியாவில் முதலீடு செய்ய இந்திய வெளியுறவு அமைச்சர் அழைப்பு.!

இந்த சந்திப்பின் போது, கத்தார் அமீர் அவர்கள் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடியிடமிருந்து எழுத்துப்பூர்வ செய்தியைப் பெற்றார்.

இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அவற்றை ஆதரிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் உண்டான வழிமுறைகள் குறித்த இந்திய பிரதமரின் எழுத்துப்பூர்வ செய்தியை இந்திய வெளியுறவு அமைச்சர் கத்தார் அமீர் அவர்களிடம் வழங்கினார்.

கத்தாரில் வசிக்கும் 5 வயது இந்திய சிறுவனின் புதிய உலக சாதனை.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…