நவீன குவைத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட ஷேக் நாசர் சபா அல் அகமது அல் ஜாபர் அல் சபா கடந்த (20-12-2020) ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
இதனையடுத்து, குவைத்தின் அமீர் ஷேக் நவாஃப் அல் அகமது அல் ஜாபர் அல் சபா அவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி மற்றும் துணை அமீர், பிரதமர் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
குவைத் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஷேக் நாசர் காலமானார் – கத்தார் அமீர் உள்ளிட்டோர் இரங்கல்.!
இந்நிலையில், கத்தார் அமீரின் மனைவி HH Sheikha Jawaher bint Hamad bin Suhaim Al-Thani அவர்கள் நேற்று (22-12-2020) மறைந்த குவைத் நாட்டின் ஷேக் நாசர் சபா அல் அகமது அல் ஜாபர் அல் சபா அவர்களின் மனைவி Sheikha Hissa Sabah Al-Salem Al-Sabah அவர்களிடம் இரங்கலைத் தெரிவித்தார்.
மேலும், மறைந்த குவைத் ஷேக் நாசர் அவர்கள் சொர்க்கத்தில் நிம்மதியாக ஓய்வெடுக்கவும், ஆளும் குடும்பம் மற்றும் குவைத் மக்கள் பொறுமையுடனும், ஆறுதலுடனும் இருக்க தான் சர்வவல்லமையுள்ள இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.
கத்தார் வருபவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலம் பிப்ரவரி 15, 2021 வரை நீட்டிப்பு.!
HH Sheikha Jawaher bint Hamad bin Suhaim Al-Thani, wife of HH the Amir, offered condolences to Sheikha Hissa Sabah Al-Salem Al-Sabah wife of the late Sheikh Nasser Sabah Al-Ahmad Al-Jaber Al-Sabah, in Kuwait city. HH Sheikha Jawaher also offered condolences to the ruling family.
— Qatar News Agency (@QNAEnglish) December 22, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…