கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட 200 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 218 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் இன்று (15-10-2020) பதிவு செய்துள்ளது.
இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 128,803ஆக உள்ளது.
இதையும் படிங்க: கத்தார் வருபவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு.!
கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் இரண்டு பேரின் மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் பதிவு செய்துள்ளது. தற்போது வரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 222ஆக உயர்ந்துள்ளது.
கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 218 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,25,802ஆக உள்ளது.
இதையும் படிங்க: கத்தாரில் உள்ள இந்தியர்களுக்கான காப்பீடு திட்டம் குறித்து சிறப்பு முகாம்.!
பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 5,416 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை மொத்தம் 8,55,154 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.
آخر مستجدات فيروس كورونا في قطر
Latest update on Coronavirus in Qatar#سلامتك_هي_سلامتي #YourSafetyIsMySafety pic.twitter.com/9UgKdzuSMK— وزارة الصحة العامة (@MOPHQatar) October 15, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…