கத்தாரில் நாளை நிறைவடையும் 5வது அறுவடை விழா.!

Mahaseel festival concludes tomorrow
Pic : katara

கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வரும் வருடாந்திர Mahaseel (அறுவடை) விழாவின் ஐந்தாம் பதிப்பு நாளை (02-01-2021) சனிக்கிழமை நிறைவடைகிறது.

இந்த விழாவானது, பல்வேறு கத்தார்  பண்ணைகளிலிருந்து கோழி, பால் உள்ளிட்ட பல தரமான உயர்தர தயாரிப்புகளை வழங்குகிறது என (katara) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கத்தார் அமீர் அவர்களின் 2021 புத்தாண்டு வாழ்த்து செய்தி.!

இந்த அறுவடை விழா, கத்தார் பண்ணைகளில் வளர்க்கப்படும் மிகச்சிறந்த பயிர்களைக் காண்பிப்பதால் சிறந்த சந்தைப்படுத்தல் தளமாக என்றும் பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்வதாகவும் விளங்குகிறது என கட்டாராவின் மக்கள் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர் சேலம் அல்-மர்ரி தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு வாழ்த்துக்களைத் பரிமாறிக்கொண்ட கத்தார் அமீர்.!

இந்த விழாவை Ivory coast நாட்டு தூதர் Dr.Sisi Abdel Karim, கென்யா நாட்டு தூதர் Patrick Cornell Ahanda மற்றும் தென் கொரியாவின் தூதர் Kim Chang-mo ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த விழாவானது, அடுத்த வார இறுதியில் இருந்து வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மார்ச் மாதம் 31ம் தேதி வரை Mahaseel Souq-ல் தொடர்ந்து நடைபெறும் என கட்டாரா அறிவித்துள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…