இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இடையே சர்வதேச விமான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக பிற நாடுகளுடன் “Air Bubble” எனும் ஒப்பந்தம் போடப்பட்டு அதன் மூலம் இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா மற்றும் கத்தார் இடையே சிறப்பு விமான சேவைகளை தொடங்க இருநாட்டு அரசாங்கமும் ஒப்புக்கொண்டதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி முதல் டிசம்பர் 31 வரை சிறப்பு விமான சேவைகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கத்தாரில் இன்று இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி.!
இந்நிலையில், இந்த மாத இறுதியுடன் முடிவடையவிருந்த இந்த சிறப்பு விமான சேவைகள் ஜனவரி 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், Air Bubble ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்கப்படும் விமான சேவைகள் ஜனவரி மாதம் 31ம் தேதி வரையிலும் தொடரும் என்றும் கத்தார் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும், தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கும் இந்தியா-கத்தார் இடையிலான Air Bubble ஏற்பாட்டைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும், நேபாளம் மற்றும் பூட்டான் குடிமக்களுக்கும் இந்த வசதி உள்ளது என்றும் கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
கத்தார் ஹமாத் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக பரவும் வதந்தி; HIA மறுப்பு.!
India- Qatar Air Bubble Arrangement extended till 31 January 2021. Relaxation also allowed for Indians stranded in South America and Africa to use the Air Bubble arrangement between India and Qatar. Facility also available to citizens of Nepal and Bhutan. @QNAEnglish @DGCAIndia
— India in Qatar (@IndEmbDoha) December 30, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…