கத்தார் நாட்டின் புதிய இந்திய தூதராக டாக்டர் தீபக் மிட்டல் (Dr Deepak Mittal) நியமிக்கப்பட உள்ளார் என கத்தார் இந்திய தூதரகம் நேற்று (06-08-2020) அறிவித்துள்ளது.
கத்தாரில் 2016ஆம் ஆண்டு முதல் இந்திய தூதரக பணியாற்றி வந்த ஸ்ரீ பெரியசாமி குமாரன் தற்போது சிங்கப்பூர் இந்திய தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கத்தாரில் புதிய இந்திய தூதராக டாக்டர் தீபக் மிட்டல் நியமிக்கப்பட உள்ளார் என தூதரகம் ட்வீட் செய்துள்ளது.
இவர், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலாளராக இருந்தவர். மேலும், இந்திய வெளியுறவு சேவையின் 1998ம் தொகுப்பை சேர்ந்தவராவார்.
இதையும் படிங்க: லெபனான் வெடி விபத்து: கத்தார் தனது இரண்டாவது விமானத்தை அனுப்பியது.!
கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/
? Twitter
https://twitter.com/qatartms
? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5
? Telegram https://t.me/tamilmicsetqatar