லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அவசர மருத்துவ உதவியை அனுப்புமாறு கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கத்தார் அமீர் லெபனானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ QAR 50 மில்லியன் நன்கொடை.!
கத்தார் லெபனான் நாட்டிற்கு உதவ இரண்டு கள மருத்துவமனைகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படையின் கத்தார் தேடல் மற்றும் மீட்புக் குழுவையும் (Lekhwiya) தேவையான உபகரணங்களுடன் கடந்த புதன்கிழமை (05-08-2020) அன்று அனுப்பி வைத்தது.
இந்நிலையில், கத்தார் உள்நாட்டு பாதுகாப்பு படையின் தேடல் மற்றும் மீட்பு குழு (Lekhwiya) பல சர்வதேச அணிகளுடன் இணைந்து நேற்று (07-08-2020) காலை பெய்ரூட் துறைமுகத்தில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கியது.
லெபனான் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கத்தார் பல்வேறு விதமான மருத்துவ உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
The LAF Commander in Chief Joseph Aoun inspected the search and rescue operations site at #BeirutPort, where he met Internal Security Force's (#Lekhwiya) who commences today morning search and rescue operations at #BeirutPort, collaborating with other several international teams. pic.twitter.com/yiH7oVplrv
— سفارة قطر – بيروت (@QatarEmb_Beirut) August 7, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/
? Twitter
https://twitter.com/qatartms
? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5
? Telegram https://t.me/tamilmicsetqatar