இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாதத்தின் 10ஆம் நாளில் ஈத் அல் அத்ஹா எனப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். தற்பொழுது இந்த வருடத்தில் வருகின்ற ஜூலை 31ஆம் தேதி ஈத் அல் அத்ஹா கொண்டாடப்பட இருப்பதாக வளைகுடா நாடுகள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: கத்தாரில் ஹஜ் பெருநாள் தொழுகை 401 மசூதிகள் மற்றும் பிரார்த்தனை மைதானங்களில் நடைபெறும்.!
இந்த ஹஜ் பெருநாள் தொழுகை கத்தாரில் 401 மசூதிகள் மற்றும் பிரார்த்தனை மைதானங்களில் (Prayer Ground) நடைபெற உள்ளதாக Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அல் ஷீஹானியா (Al Sheehaniya) நகராட்சியின் சேவைகள் துறையால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், பொது தூய்மைத் துறையின் ஒத்துழைப்புடன் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெறும் பிரார்த்தனை மைதானங்களை சுத்தம் செய்தல் மற்றும் கிருமிநாசினி தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/
? Twitter
https://twitter.com/qatartms
? Sharechat https://b.sharechat.com/GgWjwcpyi5
? Telegram https://t.me/tamilmicsetqatar