கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டமாக கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு இன்று (29-07-2020) மேலும் ஒரு விமானம் புறப்பட்டது.
இதையும் படிங்க: ஈத் அல் அத்ஹா 2020: கத்தாரில் தயாராகும் தொழுகை மைதானங்கள்.!
கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 206 பயணிகள் மற்றும் 6 கைக்குழந்தைகளுடன் இண்டிகோ (6E 8713) விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இது வந்தே பாரத் திட்டத்தின் கீழ், கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 139வது விமானம் ஆகும்.
மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 454 கைக்குழந்தைகள் மற்றும் 25,088 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
6E 8713 took off from HIA for Chennai a short while ago with 206 passengers and 6 infants. This was the 139th flight from Doha under #Vandebharat, bringing the total number of repatriated passengers to 25088, plus 454 infants. @DrSJaishankar @MOS_MEA @MEAIndia pic.twitter.com/uRQrjC6THe
— India in Qatar (@IndEmbDoha) July 29, 2020