VBM 5ம் கட்டம்: தோஹாவில் இருந்து தமிழகத்திற்கு இன்று ஒரு விமானம் புறப்பட்டது.!

Pic: Twitter/India In Qatar

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டமாக கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு இன்று (08-08-2020) ஒரு விமானம் புறப்பட்டது.

கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 169 பயணிகள் மற்றும் 2 கைக்குழந்தைகளுடன் இண்டிகோ (6E 8713) விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இது வந்தே பாரத் திட்டத்தின் கீழ், கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 160வது விமானம் ஆகும்.

இதையும் படிங்க: கத்தார் அமீர் லெபனானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ QAR 50 மில்லியன் நன்கொடை.!

மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 496 கைக்குழந்தைகள் மற்றும் 28,308 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar