கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டமாக கத்தாரில் இருந்து கேரளாவிற்கு இன்று (07-08-2020) மேலும் ஒரு விமானம் புறப்பட்டது.
கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்கு 175 பயணிகள் மற்றும் ஒரு கைக்குழந்தையுடன் இண்டிகோ 6E 8704 விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இது வந்தே பாரத் திட்டத்தின் கீழ், கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 158வது விமானம் ஆகும்.
இதையும் படிங்க: கத்தாரின் புதிய இந்திய தூதராக டாக்டர் தீபக் மிட்டல் நியமிக்கப்பட உள்ளார்.!
மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 493 கைக்குழந்தைகள் மற்றும் 27,968 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
6E 8704 took off a short while ago from HIA for Kochi with 175 adults and 1infant. This was the 158th flight from Doha under #Vandebharat, bringing the total number of repatriated passengers to 27968, plus 493 infants. @DrSJaishankar @MOS_MEA @MEAIndia pic.twitter.com/fASZWIMsjV
— India in Qatar (@IndEmbDoha) August 7, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/
? Twitter
https://twitter.com/qatartms
? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5
? Telegram https://t.me/tamilmicsetqatar