கத்தாரில் இருந்து கேரளாவிற்கு இன்று மேலும் ஒரு விமானம் புறப்பட்டது.!

Pic: Twitter/India In Qatar

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டமாக கத்தாரில் இருந்து கேரளாவிற்கு இன்று (13-08-2020) மேலும் ஒரு விமானம் புறப்பட்டது.

கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு 167 பயணிகளுடன் இண்டிகோ 6E 8702 விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இது வந்தே பாரத் திட்டத்தின் கீழ், கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 178வது விமானம் ஆகும்.

இதையும் படிங்க: கத்தார் 2022 FIFA உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு.!

மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 528 கைக்குழந்தைகள் மற்றும் 31,087 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Instagram https://www.instagram.com/qatartms

? Telegram https://t.me/tamilmicsetqatar