கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக பத்து நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கத்தார் செய்தி நிறுவனம் நேற்று (29-10-2020) ட்வீட் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் (COVID-19) மக்களிடையே பரவுவதை கட்டுப்படுத்த கத்தார் முயற்சித்து வரும் வேளையில், அரசாங்கத்தின் உத்தரவுகளை சிலர் மீறி, பொது சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரான்ஸ் தேவாலய தாக்குதல்: கத்தார் அரசு கடும் கண்டனம்.!
கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ள விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள்:
- Ali Ahmed Ibrahim Ahmed Al-Mansouri
- Hani Hassan Mohamed Gad
- Radwan Muhammad Al-Saleh Bahia
- Abdullah Faisal Yusef Muhammad Behzad
- Mubarak Khalifa Mubarak Al-Nafaihi Al-Kubaisi
- Abdullah Muhammad Hikmat Zahid Al-Batrani
- Muhammad Sharif Al Islam
- Ali Jamil Muhammad Imamdin
- Nabiz Sikandar
- Mahavej Allam
The competent authorities arrested 10 people who violated the requirements of the home quarantine, they committed to following, which they are legally accountable for, in accordance with the procedures of the health authorities in the country #QNA
— Qatar News Agency (@QNAEnglish) October 29, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…