கத்தார் நாட்டில் வருகின்ற டிசம்பர் 18ம் தேதியன்று தேசிய தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. ஆண்டுதோறும் தேசிய தினத்தில் நடைபெற்று வந்த Darb Al Saai நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாரின் தேசிய தின நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு நிர்வாகம் இந்த அறிவிப்பை நேற்று (27-10-2020) வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: COVID-19: கத்தாரில் இன்று (அக்.28) புதிதாக 250 பேர் பாதிப்பு.!
தற்பொழுது நிலவிவரும் கொரொனா தொற்று (COVID-19) காரணமாக இந்த நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், அடுத்து ஆண்டு இந்த நிகழ்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் தேசிய தின நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், கத்தார் மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த ஆண்டு Darb Al Saai நிகழ்வுகளை ரத்து செய்ததாக குழு குறிப்பிட்டுள்ளது.
Darb Al Saai என்பது கத்தார் நாட்டின் நிறுவனர் Sheikh Jassim bin Mohamed bin Thani அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிமுறைகளை பயன்படுத்தும் “தூதரின் பாதை” என்று பொருள்.
இதையும் படிங்க: அமிரி திவானின் முதல்வரை நியமனம் செய்தார் கத்தார் அமீர்.!
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…