கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் இரண்டு பேரின் மரணம், 292 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 303 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் இன்று (12-08-2020) பதிவு செய்துள்ளது.
இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 1,13,938ஆக உள்ளது.
இதையும் படிங்க: லெபனானுக்கு கத்தார் அனுப்பிய முதல் கள மருத்துவமனை திறப்பு.!
கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் இரண்டு பேரின் மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் இன்று பதிவு செய்துள்ளது. தற்போது வரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 190ஆக உயர்ந்துள்ளது.
கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 303 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,627ஆக உயர்ந்துள்ளது.
பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணிநேரத்தில், 4,706 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை 5,33,995 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு மேலும் 36 விமானங்கள்; தூதரகம் அட்டவணை வெளியீடு.!
آخر مستجدات فيروس كورونا في قطر
Latest update on Coronavirus in Qatar#سلامتك_هي_سلامتي #YourSafetyIsMySafety pic.twitter.com/NgmQ5YmUYj— وزارة الصحة العامة (@MOPHQatar) August 12, 2020