கத்தார் அல் ஷீஹானியா (Al Sheehaniya) நகராட்சியின் சேவைகள் விவகாரத் துறை தனது அதிகார எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
நாடு முழுவதும் தூய்மை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அல் ஷீஹானியா (Al Sheehaniya) நகராட்சியின் சேவைகள் விவகாரத்துறை அல் நஸ்ரானியா (Al Nasraniya) மற்றும் ஒட்டக பந்தய பகுதிகளில் நேற்று (25-08-2020) கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொண்டது.
இதையும் படிங்க: கத்தாரில் சுமார் 10 மில்லியனைத் திருடிய இணைய மோசடி கும்பல் கைது..!
முன்னதாக, கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பொது சுகாதாரத் துறை சிறப்பு களக்குழுக்கள் கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலை முதல் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டது.
இந்த சிறப்பு களக்குழுக்கள், கத்தாரில் அழகிய மற்றும் நாகரிக தோற்றத்தை உறுதி செய்வதற்காக பொது இடங்கள், வீதிகள், பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் போன்ற இடங்களிலும் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டது.
இதையும் படிங்க: கத்தார் Umm Slal பகுதியில் கைவிடப்பட்ட வாகனங்கள் அகற்றம்..!
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…