கத்தார் உள்துறை அமைச்சகம் தனது சேவை மையத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்துகிறது..!

MoI expands service center operations
Pic: MOI

கத்தாரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் திட்டத்தின் நான்காவது கட்டத்திற்கு ஏற்ப, உள்துறை அமைச்சகம் (MoI) தனது சேவை மையத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் ட்வீட்டில், உள்துறை அமைச்சகத்தின் சேவை மையங்கள் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் ருவாஸ் துறைமுகத்தில் கஞ்சா பொட்டலங்கள் கடத்த முயற்சி; சுங்க அதிகாரிகள் முறியடிப்பு.!

மேலும், உள்துறை அமைச்சகத்தின் சேவை மையங்கள் மீண்டும் செயல்பாட்டில் உள்ளது என்றும், கத்தார் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை (குறிப்பாக பொது இடங்களில்) தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் நான்காம் கட்டமாக என்னென்ன கட்டுப்பாடுகள் தளர்வு.? – முழு விபரம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…