கத்தாரில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது..!

Three individuals arrested for drug trafficking
Pic: Twitter/MOI

கத்தார் உள்துறை அமைச்சகத்தின் போதைப்பொருள் அமலாக்க பொது இயக்குநரகம் போதை பொருள்கள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று ஆசிய நாட்டவர்களை கைது செய்தது.

அவர்களிடமிருந்து, 29 கிலோ கஞ்சா மற்றும் 10.2 கிலோ methamphetamine போதை பொருள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் புகையிலை பொருட்களை கடத்த முயற்சி; சுங்க அதிகாரிகள் முறியடிப்பு.!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சில நபர்கள் குறித்து இயக்குநரகத்திற்கு தகவல் கிடைத்தையடுத்து, உடனடியாக ஒரு தேடல் மற்றும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடைமுறைகளுக்காக தகுதிவாய்ந்த அதிகாரிகளிடம் அனுப்பப்பட்டுள்ளனர் என கத்தார் உள்துறை அமைச்சகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தோஹா மெட்ரோ பயணிகளுக்கு இலவச WiFi வசதி அறிமுகம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

 Twitter

 Instagram