வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்ட திருப்பியனுப்பும் நடவடிக்கையானது வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறாம் கட்டத்தின் கீழ், ஓமன் நாட்டிலிருந்து இந்தியா செல்லும் விமானங்களின் பட்டியலை ஓமனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
இந்த அட்டவணைப்படி, செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிற்கு 21 விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா செல்லவிருக்கும் இந்த 21 விமானங்களில் 3 விமானங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காய்கறிகள், பழங்கள், மீன்கள் மற்றும் அடிப்படை பொருட்களுக்கான அதிகபட்ச விலைகள் நிர்ணயம்; கத்தார் MOCI ட்வீட்.!
இந்த மூன்று விமானங்களில், இரண்டு விமானம் செப்டம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கும், செப்டம்பர் 9ம் தேதி திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு விமானமும் இயக்கப்பட உள்ளது.
மேலும், இந்த விமானங்களின் பயணிக்க விரும்புபவர்கள் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள docs.google.com எனும் ஆன்லைன் படிவத்தில் தங்களது
விபரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்றும், படிவத்தை சமர்ப்பித்தவர்கள் ஓமனில் உள்ள Ruwi மற்றும் Wattaya போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய ஏர் இந்தியா அலுவலகத்தை அணுகி டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கத்தார் ஏர்வேஸ் சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு விமான சேவைகளை தொடக்கம்.!
List of Flights scheduled from Oman under #VandeBaratMission – #Phase6 (As on August 23) pic.twitter.com/LdpFlLjlCJ
— India in Oman (Embassy of India, Muscat) (@Indemb_Muscat) August 23, 2020